Popular Posts

Tuesday, October 5, 2010

குழந்தைப் பாடல்

உள்ளுக் குள்ளே
உறங்கிக் கிடக்கும் பாரு1

வெள்ளித் திரையில்
ஓடிவரும் பாரு!

கறுப்பு வெள்ளையாக
ஓடும் படத்திணையும் பாரு!

திறக்காத கண்ணுக்குள்ளே
தொடரும் படம் பாரு!

மறந்து போன கதைகளும்
சுரந்து வரும் பாரு!

உறவுக் கொடி யெல்லாமே
சுற்றி வரும் பாரு!

உயர்திணையோ அஃறிணையோ
உருப்படியாய்ப் பாரு!

சுயசிந்தனையில் கலர்கலரா
ஓடிவரும் பாரு!

எழுதாத கதை யெல்லாம்
படமாகும் பாரு!

பழுதின்றி திரையில் தான்
ஓடி சிரிக்கும் பாரு!

No comments:

Post a Comment