உள்ளுக் குள்ளே
உறங்கிக் கிடக்கும் பாரு1
வெள்ளித் திரையில்
ஓடிவரும் பாரு!
கறுப்பு வெள்ளையாக
ஓடும் படத்திணையும் பாரு!
திறக்காத கண்ணுக்குள்ளே
தொடரும் படம் பாரு!
மறந்து போன கதைகளும்
சுரந்து வரும் பாரு!
உறவுக் கொடி யெல்லாமே
சுற்றி வரும் பாரு!
உயர்திணையோ அஃறிணையோ
உருப்படியாய்ப் பாரு!
சுயசிந்தனையில் கலர்கலரா
ஓடிவரும் பாரு!
எழுதாத கதை யெல்லாம்
படமாகும் பாரு!
பழுதின்றி திரையில் தான்
ஓடி சிரிக்கும் பாரு!
Tuesday, October 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment