Popular Posts

Tuesday, October 5, 2010

குழந்தைப் பாடல்

* மெழுகு வர்த்தி போலவே
உருகிடு வாரு-கல்வி
அழகைக் கொடுத்தும் தான்
சிறந்திடு வாரு!

உண்மைத் திருக்கோ யிலாக
விளங்கிடு வாரு-கல்வி
நன்மை யாவையும் தான்
சொல்லிடு வாரு!

சொல்லித் தரும் பாடத்திலே
சிறந்திடு வாரு-கல்வி
தரும் சேவையைத் தான்
கூறிடு வாரு!

யாரையுமே கண்மணி போல்
பார்த்திடு வாரு-கல்விப்
பாரை உயர்த்தும் கருவியெனக்
காணச் சொல்வாரு!

மழை தரும் மேகமாக
இருந்தி டுவாரு-கல்வி
இழையில் ஆடை நெய்தே
அணிந்தி டுவாரு!

இரக்க குணம் இருக்கவும்
எண்ணிடு வாரு-கல்வி
அரக்க குணம் அழித்திடுமெனச்
சொல்லிடு வாரு!

பிரம்பெடுத்து அடிக்க மனம்
வெறுத்தி டுவாரு-கல்வி
உரமிட்டு வளர்க்கத் தான்
அன்பை விதைப் பாரு!

ஞானம் சுரக்கும் கண்களைத்
திறந்தி டுவாரு-கல்வி
ஊனமின்றிக் கற்கவும் தான்
உதவி டுவாரு!

ஆசிரியர் என்று சொன்னால்
அறிவு ஊறுமே-கல்வி
வாசித்து சிறப்பித்தால்
வாழ்வும் சிறக்குமே!

No comments:

Post a Comment