பூமிக்கு நீயோ
புது விதை!
புரட்டி எடுக்கும்
ம்ழை விதை!
காலம் கனிய
வரும் விதை!
காட்சிக் கதுவும்
கனி விதை!
உலகம் உனக்குள்
ஒரு விதை!
உயிர் வளர்க்கும்
கரு விதை!
அன்பு மனங்கள்
பாகாய் உருகிட..
இன்பம் பெருகிட
வரும் விதை!
இழைபோல் இறங்கி
பூமியில் பெருகி..
தழைத்து ஓங்கும்
உயிர் விதை!
சிறுதுளி பெருதுளி
ஆகும் விதை!
பருவம் தாண்டியும்
தருமே விதை!
Tuesday, October 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment