அன்னாந்து பார்க்கலாம்
ஆசை வானில் சுற்றலாம்.
என்னவென்று கேட்கலாம்
ஏழிசை இடியைக் காணலாம்!
விண்ணையுமே ரசிக்கலாம்
வீணை இசையும் மீட்டலாம்.
கார்குழல் மேகம் கலைவதை
கண்ணிமை சிமிட்டிப் பேசலாம்!
ஆயிரமா யிரம்நட் சத்திரங்கள்
ஆசையில் சுற்றும் முழு நிலவை
பாயிரம் பாடி அழைத்திடும்
பருவ மேகக் கூட்டங்களை!
அன்பு கொண்ட பூமிக்கு
அழுதே நீரைச் சொரிகிறது
கனவு கண்ட வானமும்
காட்சியை ரசித்து மகிழ்கிறது!
Tuesday, October 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment