Popular Posts

Friday, November 5, 2010

கவிதை

வீதியில் கொளுத்திப் போட்டனர்
ஊர் முழுக்க
புரளி.

ஒளியின் விட்டத்தில்
சுற்றிச் சுழன்றது
சங்கு சக்கரம்.

திரிக்க முடியாமல்
கொளுத்தியது குழந்தை
தீபாவளிக் கயிறு.

வளைக்க முடியவில்லை
கம்பியைச் சுற்றிலும்
ஒளி விழுதுகள்.

எப்போதும் ஓடும்
ஜீவநதியோ?
ஹைக்கூ.

தரையில் நின்று
பூ மழை பொழிகிறது
புஸ் வானம்.

தரையில் புழுதி கிளப்பி
வானத்தில் இடி இடிக்கிறது
ஒபாமா வருகை.

தீபாவளி-2010

குழந்தைகள் வானத்தில் தீபாவளி..

by Aari Aarison on Thursday, November 4, 2010 at 9:18pm
புஸ்வானம் கொளுத்தினேன்குப்பிக்குள் பூத்திருந்த மலர்களின் வாசத்தை உணரமுடிந்தது..கயிறு கொளுத்திப்பார்த்தேன்ஒளி சிந்தும் அழகை ரசிக்க முடிந்தது.தீபமாய் எறிந்த விளக்கில்சுறு சுறு கம்பியை நீட்டினேன்சிதறிய ஒளியின் அழகை உணர முடிந்தது.கட்டாந்தரையில் சங்கு சக்கரம் கொளுத்தினேன்வாழ்வின் சுழற்சியை வாசிக்கமுடிந்தது..கருப்பு மாத்திரையை கொளுத்தினேன்படமெடுத்து ஆடிய பாம்பின்கொதிப்பை அறிய முடிந்தது.மத்தாப்புக்குச்சியைஉரசிப்பார்த்ததில்மெளனத்தின் அழகில் கரைய முடிந்தது..வெடிச்சத்தம் உணர மறுத்தவெகுளித்தனம் நிறைத்த குழந்தைகள் வானத்தில்குதூகலமாய் கொண்டாடப் படுகிறது..தீப ஒளித்திருநாள்!