Popular Posts

Friday, November 5, 2010

கவிதை

வீதியில் கொளுத்திப் போட்டனர்
ஊர் முழுக்க
புரளி.

ஒளியின் விட்டத்தில்
சுற்றிச் சுழன்றது
சங்கு சக்கரம்.

திரிக்க முடியாமல்
கொளுத்தியது குழந்தை
தீபாவளிக் கயிறு.

வளைக்க முடியவில்லை
கம்பியைச் சுற்றிலும்
ஒளி விழுதுகள்.

எப்போதும் ஓடும்
ஜீவநதியோ?
ஹைக்கூ.

தரையில் நின்று
பூ மழை பொழிகிறது
புஸ் வானம்.

தரையில் புழுதி கிளப்பி
வானத்தில் இடி இடிக்கிறது
ஒபாமா வருகை.

No comments:

Post a Comment