டவுசர் கிழிந்து
டயர் வண்டி ஓட்டியபோது
என்னோடு வரும்
நண்பேன்டாக்களுக்கும்
நட்பின் ஆழம் புரிந்திருந்தது
பால்ய பருவத்திலும்!
பங்கிட்டுக்கொள்வதில்
எப்போதும் பிரச்னை
எழுவதே இல்லை.
பலகையில் எழுதும் பலபமும்
நோட்டில் எழுத பென்சிலும்
நொடியில் வாங்கித்தரும்
வழுக்கை மண்டை வாத்தியாரை
இப்போதும் நினைவிருக்கிறது!
வரதராஜன் என்ற பெயரும்
மனிதில் பதிந்தவையே!
வெள்ளிக்கிழமை தோறும்
விரதம் இருப்பார்.
வித்தியாசம் தெரியாமல்
அடித்தும் தொலைப்பார்
சாதி இரண்டொழிய
வேறில்லை என்பார்.
அடித்த அடி வலிக்க
நாங்கள் அவரிடமே
சூட்டோடு கேட்டுவிட்டோம்
நீங்கள் எந்த ஜாதி சார்?
அடிக்கும் ஜாதியா?
அடிக்காத ஜாதியா?
வழுக்கைமண்டை வாத்தியார்
மண்டையில் பிரம்பு
பிராண்டிக்கொண்டிருந்தது!
Tuesday, October 19, 2010
Subscribe to:
Posts (Atom)