மூடுபனி முக்காடு போட்ட
மலைச்சிகரம்!
காடுகளில்..
வசிப்பிடங்களைத்தேடித்திரியும்-
விலங்கினங்கள்!
சலனமற்று ஓடும் நதியின்..
இயற்கை எழில் கொஞ்சும்
அழகு!
சலனத்தோடு குதித்திறங்கும்
அருவியின் அற்புதம்!
கண் இமைக்குள் சிக்காமல்-
தொடரும் அலைகளைத்
தயாரித்து அனுப்பி
சந்தோஷிக்கும்
கடல்!
தாலாட்டும் மேகத்தை..
தாரவாந்து போகாமல்-
பாதுகாத்தும்..
அடைகாத்தும்..
வைத்திருக்கும்-
வானம்!
மயங்கிப்போன..
எல்லாவற்றையும்-
உயிர்ப்பித்து-
ஆனந்தமாக்கும்..
சூரிய சூட்டின் சிரிப்பில்-
வசியமாகி..
குதுகலமாயிருக்கிறது..
குழந்தைகளைச் சுமக்கும்
வீடுகள்!
பனி படர்ந்த தேசத்துக்குள்..
உயிர்ப்பின் நிழலாக..
உலா வருகிறது
வெய்யில்!
Tuesday, December 28, 2010
உயிர்ப்பின் நிழலாக..
Subscribe to:
Posts (Atom)