ஊர்ந்து சென்று
உயிர் வளர்த்தது
வேர்.
தாரை தப்பட்டையுடன்
பூமிக்கு வந்தது
மழை.
காய்தல் தீது
நனைதல் நன்று
மீன் வலை.
எலிகள் காத்திருந்தன
அறுவடை வயலெங்கும்
வலைகள்.
உயிர்க்கருவுக்கு
எடுத்தனர் விழா
வளை காப்பு.
இழையில் பின்னியது
குடியிருக்கும் வீடு
சிலந்தி.
வானத்து இடிமுழக்கம்
ஒன்று சேர்ந்து கேட்டன
திசைகள்.
மத்தாப்பு ஒளியில்
நனைந்து கொண்டிருக்கிறது
காதல்.
வற்றாத ஜீவநதியாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
நாக்கு.
குழைந்தைக்கு இனித்தது
வான் நிலா
தேன் பலா.
முள் தைத்தும்
வலிக்காமல் ஓடுகிறது
நதி.
முள்ளோடு
வாழ்கிறது
மீன்.
Monday, October 25, 2010
Subscribe to:
Posts (Atom)