*வாழ்வின் வெற்றியை
செதுக்கியது
சிக்கனம்.
*விளைநிலம்
வீசியெறிந்தனர் கத்திகள்
போர்மேகம்.
*கவலை மறந்து
கவிதை தீட்டினான்
தோட்டத்தில் மின்மினி.
*கத்தியில்லை ரத்தமில்லை
போரில் முதலீடானது
அன்பு.
*வேரின் அழுகையில்
துளிர்த்தது செடி
வறண்ட பூமி.
*இடி இடித்த மேகத்தோடு
பேசியது மின்னல்
வீரம்.
*வறண்ட பூமி
வீரத்தோடு புறப்பட்டது
மழை நீர்.
*”கத்தி” பேசியவனுக்கு
முதல் பரிசு
வீரம்.
*வரப்பு தகராறு
வாய் கிழிய சண்டையிட்டனர்
சகோதரிகள்.
Friday, December 17, 2010
Subscribe to:
Posts (Atom)