அள்ளித் தரும்
அறிவை யுமே
சேமிக்க வேணும்-அதற்கு
பள்ளிக் கூடம்
போக வேணும்
பாப்பாவே நீயும்!
கல்விக் கண்ணைத்
திறந்து காட்ட
சொல்லிட வேணும்-அங்கே
காட்சி தெரிய
மகிழ்ச்சி பொங்க
பேசிட வேணும்!
சொல்லிப் புரிய
வைக்கவே தான்
புத்தியும் வேணும்-அதில்
சுத்தத் தங்கம்
சுடர் விடவும்
நெருப்பே வேணும்!
இட்டுக் கட்டிப்
புரிய வைக்க
ஆசான் வேணும்-அதை
மெட்டுக்கூட்டி
இனிமை யாக்க
இயற்கை வேணும்!
Tuesday, October 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment