*சொட்டும் ரத்தத்தில்
குளிர் காய்ந்தே இருக்கிறது
சாதி அரசியல்.
*காற்றைக்களவாடி
பயணிக்கிறது மதத் தேர்
புழுக்கத்தில் மக்கள்.
தாயின் கருப்பை
கிழிந்துபோக சிரிக்கிறது
உலகமயம்.
Subscribe to:
Post Comments (Atom)
மானம் வாழ்வியல் நெறியில் ஒர் அடையாளச்சொல்.உடலியல் ரீதியில் அது ஒரு நாகரீகத்தின் குறியீடு.அவமானம்,அசிங்கம்,ஆபாசம் ஆகியவற்றின் தோள் பாவை மறைக்கும் சீலை.சின்னச்சின்ன இழைகள் பின்னிநெய்தலில் சேலையாகவும் போர்வையாகவும் இருந்து மானம் காக்கிறது.நெசவின் மூலமே மனிதம் நாகரீகம் அடைந்து மேன்மையுற்றது.அந் நெசவின் வழி சமூகத்தின் யதார்த்தத்தை,வாழ்வியலை இண்டு இடுக்குகளில் எல்லாம் தேடும் இலக்கிய வலையாக இந்நெசவு.
No comments:
Post a Comment