Popular Posts

Tuesday, October 5, 2010

குழந்தைப் பாடல்

அன்புப் பயிர் வளர்க்கிறது
ஆசை கொள்ள வைக்கிறது
ஈ யீ என மனதும் மகிழ்கிறது
உயிர் வளர்வதைச் சொல்கிறது
ஊஞ்சல் கட்டி அழைக்கிறது
என்றும் குளிர்ச்சி தருகிறது
ஏங்கும் மனதும் இனிக்கிறது
ஐயமின்றி அழகது தான்
ஒருமை மனதின் ஓவியமாம்
ஓங்கிச் சொல்வோம் உயிரதனை
ஒளஷதமாகும் உடலுக்கு
இஃதே பைந்தமிழ்த் தோட்டமாம்.

No comments:

Post a Comment