Saturday, October 16, 2010
முகநூலில் எழுதியது
NotesMy Notes
- By Aari Aarison · Thursday, October 7, 2010
தண்டல்காரனிடம்
தடியாட்சியும்..
முடமானவனிடம்
முடியாட்சியும்..
குடிப்பவனிடம்
குடியாட்சியும்..
இருக்க வேண்டிக் கொண்டனர்
டாஸ்மாக் கடைக்கு வெளியே
கியூவில் நிற்கும்
நுகரும் “புட்டி”ஸ்டுகள்!
- By Aari Aarison · Thursday, October 7, 2010ஆமை ஒன்னு வீட்டுக்குள்ளே
வந்துப் புட்டாலே
விளங்காது என்று சொல்லி
வீட்டை விற்பாரே!
குடிபோதையிலே எத்தனையோ
ஆடவரும் தான்
வீட்டுக்குள்ளே ஆமைகளாய்
வாழுகின்றாரே!
சேரிமனிதன் வீட்டுக்குள்ளே
வந்துப்புட்டாலே
தீட்டு வந்து ஒட்டிக்கொள்ளும்
என்று சொல்வாரே!
தீட்டுப் பொண்ணு வந்து
கழுவும் பாத்திரத்திலே
அரிசிச் சோறும் வெந்துபோகும்
பண்ணைப் புரத்திலே!
சேரிக்கொறத்தி வந்துப்புட்ட... - By Aari Aarison · Thursday, October 7, 2010ஹலோ சொல்லி
அழைத்ததும்-
வணக்கம் சொன்னாய்1
தமிழின் சிகரத்துக்கு
தலைசாய்த்து வணங்கி..
வாழ்த்துச் சொன்னேன்!
நன்றி தெரிவித்தாய்.
தொடரட்டும் பாராட்டுக்களின்
வேள்வி என்றதும்-
நீ..உன்னை
அடுத்த பாராட்டுக்கு
ஆயத்தப்படுத்திக் கொண்டாய்!
தொடர்வண்டிபோல் செல்லும்
மகிழ்ச்சியின் தொடர் அடுக்குகளுக்கு
சாதனையின் மீட்சி மட்டுமே
சவாலாக்கப்படுகிறது
தமிழ் நதிகளின் நீரூற்றுகளுக்கு!
செதுக்... - By Aari Aarison · Thursday, October 7, 2010
செல்லப்பிள்ளை..சின்னப்பிள்ளை
பையைப் பாரடா!
சேதி சொல்லும் உலகமெல்லாம்
உன் கைக்குள் தானடா!
கள்ளமின்றி மூளையெல்லாம்
நமக்கு தானடா!அதை
கலப்படமா மாத்திப்புட்டான்
“வெள்ளை” ஆளுடா!
விவரத்தோடு வேட்டு வைக்க
கெளம்பி வந்துட்டான்-அவன்
உலகமயம் என்று சொல்லி
ஊர நாட்டக் கலக்குறான்
வெள்ளக்காரன் நாத்தம் போயி
நாடு மணந்தது-இப்ப
தொல்லக்காரனாக வந்து
தொழிலத் தொடங்குறான்!
இத நாடு செழி...
- By Aari Aarison · Thursday, September 30, 2010தாயின் கருப்பை
கிழிந்து போக சிரிக்கிறது
உலகமயம். - By Aari Aarison · Thursday, September 30, 2010புழுக்கத்தில் மனிதர்கள்..
காற்றைக் களவாடி பயணிக்கிறது-
மதத் தேர். - By Aari Aarison · Thursday, September 30, 2010உரசி மீட்டியதும்-
சுடர்விட்டு சிரித்தது.
வீசி எறிந்ததில் தீயாகி..
எரிமலையாய்த் தொடர்கிறது-
இன்னும்!
உணர்ச்சியின்..
பள்ளத்தாக்கெங்கும்..
அரசியல் வேர்களில்-
தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது..
சரம் சரமாய்-
அணுகுண்டின்..
அரிசிக் குப்பிகள்!
மலையின் உச்சியையும்-
தொடமுடியாத அளவிற்கு! - By Aari Aarison · Sunday, September 26, 2010ரதங்களைத் தேடி
ஓடுகின்றன மதங்கள்...
இஸங்களோடு-
விதைக்கப்படுகின்றன..
நச்சு விதைகள்!
வதங்களைத்தேடி
வாழ்வை முடித்துக்கொள்ள..
தீர்மானிக்கிறது..
’முதலின்’ பயணம்.
இடிகள் வீழ்ந்து கருகிய பூமியில்-
தொலைந்து போயின..
வாழ்விடங்கள்..
மனிதகுலம் இன்னும் ..புதிய விடியலுக்கான
தேடிக்கொண்டிருக்கிறது
‘தொழிலின்’ கஜானவை..! - By Aari Aarison · Sunday, September 19, 2010சின்னத்திரையில்..
சீரியசாய் சொல்லித் தரப்படுகிறது
அழுகையினை!
மாமியார் மருமகள்..
புனிதங்கெட்டு-
அப்பா அம்மா..
அனதையாய்த் திரிவதும்..
அக்கா தங்கை..
அழுக்காகி அலைவதும்-
அண்ணன் தம்பி
அசிங்கமாய்த் திரிவதும்..
கொழுந்தன் கொழுந்தி-
கொழுப்பேறி அலைவதும்..
வீடு முழுக்க..
விழுங்கிக்கொள்ள முடிகிறது-
சின்னத்திரையால்!
சோகமோ துக்கமோ..
இன்பமோ துன்பமோ..
ஆறாக ஓடி..
உப்புக்கண்ணீர் முழுக...
9 ResultsNotes Help
கவிதை
வாழ்க்கையைத் தேடினேன்
பாலுக்கு அழுதது
குழந்தை!
கசங்கியிருந்தது
காந்தியின் வாழ்க்கை
சுதந்திர (சு)வாசம்
முட்டைக்குள்ளும்
சுவாசித்திருக்கிறது
கரு
பாலுக்கு அழுதது
குழந்தை!
கசங்கியிருந்தது
காந்தியின் வாழ்க்கை
சுதந்திர (சு)வாசம்
முட்டைக்குள்ளும்
சுவாசித்திருக்கிறது
கரு
மின் வெட்டு
வாழ்க்கை வெளிச்சத்தை
சூரியனில் தேடச் சொல்லி
அடிக்கடி வெட்டுகிறார்கள்!
மின்சாரக் கூடுகள்
எங்கும் புழுக்கம்!
உருத்தெரியாத
காற்று வெளிக்கு
இறுதி அஞ்சலி!
.எரவானம் தொடங்கி
மேல் வானம் வரையிலும் ..
விழுங்கியே விடுகிறது-
வெப்பத்தை உள்வாங்கி
விரிசல் ஏதுமின்றி
மனிதகுலத்தை
மறத்துப் போக வைக்கிறது
மின்வெட்டு!
சூரியனில் தேடச் சொல்லி
அடிக்கடி வெட்டுகிறார்கள்!
மின்சாரக் கூடுகள்
எங்கும் புழுக்கம்!
உருத்தெரியாத
காற்று வெளிக்கு
இறுதி அஞ்சலி!
.எரவானம் தொடங்கி
மேல் வானம் வரையிலும் ..
விழுங்கியே விடுகிறது-
வெப்பத்தை உள்வாங்கி
விரிசல் ஏதுமின்றி
மனிதகுலத்தை
மறத்துப் போக வைக்கிறது
மின்வெட்டு!
பள்ளிக்கூடக் கனவுகள்..
குருவிகள் தலையில்
பனங்காய்கள்!
குற்றத்தைப்
பதிவு செய்த போது..
இறகு முளைத்த-
பறவைகளாய்ப்..
பறந்து திரிகிறது-
மாணவப் பயிர்கள்!
விளைச்சல் நிலமெங்கும்
வீட்டு மனைகள்!
மூளையெங்கும் வெற்றிடங்களாய்
பதறாகிப் போகின்றன..
பள்ளிக்கூடக் கனவுகள்!
பனங்காய்கள்!
குற்றத்தைப்
பதிவு செய்த போது..
இறகு முளைத்த-
பறவைகளாய்ப்..
பறந்து திரிகிறது-
மாணவப் பயிர்கள்!
விளைச்சல் நிலமெங்கும்
வீட்டு மனைகள்!
மூளையெங்கும் வெற்றிடங்களாய்
பதறாகிப் போகின்றன..
பள்ளிக்கூடக் கனவுகள்!
சும்மா பாடுங்க..
உனக்குள்ளும் எனக்குள்ளும்
இருக்குது ஒரு பாட்டு!அதை
நினைவில் வைத்துத் தேட வேணும்
நெஞ்சுயர்த்திப் பாடவேணும்!
சாதிமதம் தீண்டாமை
ஆதரித்துப் பேசும்-அந்த
அநாகரீகக் கூட்டங்களை
ஓட வைக்க வேணும்!
மனிதகுலம் மகிழ்ச்சியாக
இருந்திட வேண்டும்!இசை
இனிமையாக பிறப்பெடுத்து
நதியாக வேண்டும்!
புது அவதாரமாகியும்
புனல் அலையாக மாறியும்
இந்தப் பாட்டு உயிராய்ப்
பொறப் பெடுக்க வேணும்!
சந்நிதான மனங்களையும்
வெற்றி கொள்ள வேணும்-இந்த
சம தர்மப் பாட்டும் தான்
கடலாகிப் பொங்கி எழ வேணும்!
சந்நிதானம் எங்கும் தமிழ்
அர்ச்சனைக்கு ஏங்கும்-புது
சாமிகளை உருவாக்க வேணும்
தமிழ்ச் சாமிகளை உருவாக்க வேணும்!
சமஸ்கிருத சாமி யெல்லாம்
துயில் எழுப்ப வேணும்!-தமிழ்
செம்மொழியைக் காதில் ஓதி
பயில வைக்க வேணும்!
மண்ணுக்குள்ளே மண்
விழுந்ததெப்படி-அதை
மாற்றிச் செல்லும் விவசாயம்
நமக்கெல்லாம் காப்படி!
எத்தனையோ பாட்டுகட்டி
நாமும் தர வேணும்-சம
தர்மப் பாட்டுப் பாடி சமூகத்தை
மாற்றிக் காட்ட வேணும்!
இருக்குது ஒரு பாட்டு!அதை
நினைவில் வைத்துத் தேட வேணும்
நெஞ்சுயர்த்திப் பாடவேணும்!
சாதிமதம் தீண்டாமை
ஆதரித்துப் பேசும்-அந்த
அநாகரீகக் கூட்டங்களை
ஓட வைக்க வேணும்!
மனிதகுலம் மகிழ்ச்சியாக
இருந்திட வேண்டும்!இசை
இனிமையாக பிறப்பெடுத்து
நதியாக வேண்டும்!
புது அவதாரமாகியும்
புனல் அலையாக மாறியும்
இந்தப் பாட்டு உயிராய்ப்
பொறப் பெடுக்க வேணும்!
சந்நிதான மனங்களையும்
வெற்றி கொள்ள வேணும்-இந்த
சம தர்மப் பாட்டும் தான்
கடலாகிப் பொங்கி எழ வேணும்!
சந்நிதானம் எங்கும் தமிழ்
அர்ச்சனைக்கு ஏங்கும்-புது
சாமிகளை உருவாக்க வேணும்
தமிழ்ச் சாமிகளை உருவாக்க வேணும்!
சமஸ்கிருத சாமி யெல்லாம்
துயில் எழுப்ப வேணும்!-தமிழ்
செம்மொழியைக் காதில் ஓதி
பயில வைக்க வேணும்!
மண்ணுக்குள்ளே மண்
விழுந்ததெப்படி-அதை
மாற்றிச் செல்லும் விவசாயம்
நமக்கெல்லாம் காப்படி!
எத்தனையோ பாட்டுகட்டி
நாமும் தர வேணும்-சம
தர்மப் பாட்டுப் பாடி சமூகத்தை
மாற்றிக் காட்ட வேணும்!
Subscribe to:
Posts (Atom)