Popular Posts

Sunday, October 24, 2010

புரிசை கூத்து2010

புரிசைகூத்து2010-விழா

 செய்யாறு,அக்டோபர்24,புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை
தெருக்கூத்து மன்றம், தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூர்,இணைந்து
நடத்திய தெருக்கூத்துவிழா 3நாள் நிகழ்வு22.10.2010 அன்று
தொடங்கியது.இதில் கலைமாமணீ கண்ணப்பதம்பிரான் ஏழாம் ஆண்டு நினைவு
நாடகக்கலைவிழா, கலைமாமணி கண்ணப்பதம்பிரான் நினைவு வாழ்நாள் சாதனையாளர்
விருது வழங்கும் விழா மற்றும்சங்கீத நாடக அகாதமியின் யுவபுரஸ்கர்
விருதுபெற்றவர்களை சிறப்பிக்கும் விழா ஆகிய முப்பெரும் விழா
ஆர்.லட்சுமணன் ஊரட்சிமன்ற தலைவர் புரிசை தலைமையில் நடைபெற்றது.நிகழ்வு
வைகறை இசைக்குழுவின் கிராமப்புறப் பாடல் நிகழ்வுடன்
துவங்கியது.கே.எஸ்.கருணாபிரசாத் வரவேற்புரை நிகழ்த்தினார்.வாழ்த்தியும்
நிகழ்வை ஒருங்கிணைத்தும் ஆர்.லோகநாதன்,செய்யாறு ஐடிஐ தாளாளர் அவர்கள்
பேசினார்.சத்ய லீலா,மல்லர் கம்பம்,கைசிக புராணம்,கி.ரா.கொழம்பு,அனுமன்
தூது அரவாண் களப்பலி ஆகிய நாடகங்கள் நடைபெற்றது. மறுநாள் 23.10.2010அன்று
பிற்பகல் தெருக்கூத்து முக ஒப்பனைப் பயிற்சி முகாம்
நடைபெற்றது.இரவில்சென்னை கலைக்குழுவின் கொக்கரிப்பு,லவ் பண்ணுங்க
சார்,குதிரைமுட்டை,முருகபூபதியின் மிருகவிதூஷகம்,ஆகிய
நாடகங்களும்,தீநடனம்,நாலுகால் நடனம் ,அரவாண் களப்பலி நாடகமும்
நடைபெற்றது.மற்றும் கண்ணப்பதம்பிரான் நினைவு வாழ்நாள் சாதனை விருதுமூத்த
தெருக்கூத்துக்கலைஞரும்,கலைமாமணி விருது பெற்றவருமான பாவலர் ஓம்
முத்துமாரி அவர்களுக்கு பேராசிரியர் வீ.அரசு,தலைவர்,தமிழ்த்துறை
,சென்னைப்பல்கலைக்கழகம்,அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
மு.பழனி,நெல்லைமணிகண்டன் ஆகியோர் சங்கீத நாடக அகாதமியின் யுவ புரஸ்கார்
விருது பெற்றதையொட்டிப் பாராட்டு விழாவும் நடைபெற்றது.விருது பெற்றவர்களை
பாராட்டி, பேராசிரியர் செ.ரவீந்திரன் மேனாள்
இலக்கியத்துறைத்தலைவர்,தில்லி பல்கலைக்கழகம்,நாடக
இயக்குனர்பிரளயன்,எழுத்தாளர் ஆரிசன் மாவட்ட செயலாளர் தமுஎகச திருவண்ணாமலை
ஆகியோர் பேசினர். இன்று இரவு மூன்றாம் நாள் நிகழ்வாக சுந்தரி கல்யாணம்
புதிய கூத்து அரங்கேற்றம் நடந்தது.நிகழ்வு ஏற்பாடுகளை
கண்ணப்பகாசி,மற்றும் கலைமாமணி கண்ணப்பசம்பந்தன்,சங்கர் ஆகியோர்
செய்திருந்தனர்.ஸ்ரீராம் நடராசன் இறுதியில் நன்றி கூறினார்.
பாவலர் ஓம் முத்துமாரி அவர்களுக்கு கலைமாமணி கண்ணப்பதம்பிரான் வாழ்நாள் சாதனையாள்ர் விருது பேராசிரியர் வீ.அரசு,தலைவர்,தமிழிலக்கியத்துறை,சென்னைப்பல்கலைக்கழகம் வழங்கியபோது எடுத்த படம்.