வெள்ளை நிறத்தில் பூனைக்குட்டி
கள்ளமின்றி வந்தது
பள்ளம் மேடு பார்த்துமே
உள்ளம் தொட்டு நின்றது!
தோட்டத்திலே பூக்களின்
செடிகள் அழகை ரசித்தது
மேயும் எலிகள் பார்த்ததும்
கவலை கொண்டு அழுதது!
வலைகள் தோண்டி வாழ்ந்திடும்
எலிகள் கண்டு சினந்தது
கலைகள் வளர்த்த தோட்டத்தில்
கண்சிமிட்டி நின்றது!
உற்றுப் பார்த்த பூனையும்
சற்று தூரம் வந்தது
பட்டுப் பூச்சி அழகையும்
பார்த்து நின்று ரசித்தது!
சுவாசித்த சிறகுகளை
சுற்றி முற்றும் பார்த்தது
சூழ்ந்து நின்று ரசிக்கவும்
வீட்டு நாயை அழைத்தது
எலிகள் தொல்லை சொல்லியும்
பூனை அழுது வழிந்தது
நாயும் அதை நினைத்துமே
நல்ல வழி சொன்னது!
எலிகள் கண்டு பயப்படும்
பூனை என்ன பூனையோ
வெள்ளை நிறம் உனக்குமே
பாழும் நிறம் ஆனதோ!
எனக்கு ஒரு பூனையும்
நண்பனாக இருக்குது
அழைத்து வந்து நானுமே
எலிகள் ஒழித்து வெல்லுவேன்!
மியா.மியா..சொல்லியே
மேலத்தெருவுக்கு வந்தது
குரைக்கும் நாயின் மியாவைக்கேட்டு
பூனை அசந்து நின்றது!
கதையை விளக்கி சொன்னது
உணவுக் கதை அழைத்தது
பூக்கள் நிறைந்த தோட்டத்தை
புன்னகைத்துப் பார்த்தது!
பூவைப்போலும் தன் இனத்தை
புதுமையாகப் பார்த்தது!
நாயைப் பார்த்துப் புன்னகைத்து
நன்றி சொல்லி மகிழ்ந்தது!
தொல்லை தரும் எலிகளை
தோண்டி வலையில் தின்றது
வெள்ளைப் பூனை வலையிலே
வீழ்ந்து வாழ்வில் இணைந்தது!
Wednesday, October 20, 2010
குழந்தைப் பாடல்கள்
Subscribe to:
Posts (Atom)