உனக்குள்ளும் எனக்குள்ளும்
இருக்குது ஒரு பாட்டு!அதை
நினைவில் வைத்துத் தேட வேணும்
நெஞ்சுயர்த்திப் பாடவேணும்!
சாதிமதம் தீண்டாமை
ஆதரித்துப் பேசும்-அந்த
அநாகரீகக் கூட்டங்களை
ஓட வைக்க வேணும்!
மனிதகுலம் மகிழ்ச்சியாக
இருந்திட வேண்டும்!இசை
இனிமையாக பிறப்பெடுத்து
நதியாக வேண்டும்!
புது அவதாரமாகியும்
புனல் அலையாக மாறியும்
இந்தப் பாட்டு உயிராய்ப்
பொறப் பெடுக்க வேணும்!
சந்நிதான மனங்களையும்
வெற்றி கொள்ள வேணும்-இந்த
சம தர்மப் பாட்டும் தான்
கடலாகிப் பொங்கி எழ வேணும்!
சந்நிதானம் எங்கும் தமிழ்
அர்ச்சனைக்கு ஏங்கும்-புது
சாமிகளை உருவாக்க வேணும்
தமிழ்ச் சாமிகளை உருவாக்க வேணும்!
சமஸ்கிருத சாமி யெல்லாம்
துயில் எழுப்ப வேணும்!-தமிழ்
செம்மொழியைக் காதில் ஓதி
பயில வைக்க வேணும்!
மண்ணுக்குள்ளே மண்
விழுந்ததெப்படி-அதை
மாற்றிச் செல்லும் விவசாயம்
நமக்கெல்லாம் காப்படி!
எத்தனையோ பாட்டுகட்டி
நாமும் தர வேணும்-சம
தர்மப் பாட்டுப் பாடி சமூகத்தை
மாற்றிக் காட்ட வேணும்!
Saturday, October 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment