Popular Posts

Saturday, October 30, 2010

குழந்தைப் பாடல்

கலைஞன் என்ற பெயரிலே

கல்லை வணங்க வைத்திடும்

அரிய கலையைச் செய்திடும்

 அழகு சிற்பி நான் தானே!


அன்பு மழையில் நனைந்தாலே

அழகு சிலையும் பிறந்திடும்

கனவு கண்டு வடித்திடும்

சிலையும் நனவா கிடும்!


வலிகள் யாவும் புன்னகை

அதற்கு உளிகலுமே பேரிகை

களிபொங்கும் வாழ்விலே

கலையும் நிலைத்து நிற்குமே!


கண் திறந்த பின்னரே

சிலையின் அழகு சிரித்திடும்

பொன்ன கையும்  இன்றியே

புன்னகையும் பிறந்திடும்!


கல்லும் சிலையான பின்

கண்டு வணங்கி சிரிக்கிறேன்

மெல்ல மெல்ல சிற்பி நான்

சிலைகள் கண்டு ரசிக்கிறேன்!

No comments:

Post a Comment