அன்பு கொண்ட மனிதருக்கு
உடம்பில் கொம்பு முளைக்குதா?
ஆசை கொண்டு பேசும் போது
காசு வந்து குவியுதா?
சந்தையிலே சரக்கு வந்து
மந்தையாக இருக்குதா?
சாதிமதம் பார்க்காமத் தான்
வாங்கிப் போக முடியுதா?
என்பு போர்த்த உடலுக்குள்ளே
குறை இருக்கு தெரியுதா?
.........................................................
பழகிச் சொல்லும் போது தானே
பகையும் வந்து சேருது?
ஊனமெல்லாம் உடலில் இருந்து
மனது நோக வைக்குது?
தானம் கொடுத்து வாழ்ந்த
நமது பரம்பரையும் அழுவுது?
சுயநலத்தில் வாழ்வும் தான்
இருந்து கொண்டு துடிக்குது?
பொதுநலத்தில் புதிய வாழ்வு
விடியவும் தான் ஏங்குது?
சுயநலமா? பொதுநலமா?
எந்தநலம் தெரியலே?
சமூகத்தின் விடுதலைக்கு
சத்தியந்தான் பொதுநிலை?
..............................................................
உலகமயம் எதிர்த்து நிற்க
மார்க்சியம் தான் கடைநிலை?
புரிந்து கொண்டால் நமக்கில்லை
வாழ்க்கையிலே இடைநிலை?
வறுமை எனும் பேய் ஒழிய
சமத்துவமே விடுதலை?
பேதமற்று வாழ்ந்திடத்தான்
பாதை மெல்ல மாறணும்?
நமக்கு....
எதுவும் சாத்தியமே என்றுசொல்லி
வாழும் வாழ்க்கை முதல் நிலை?
Saturday, October 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment