திண்ணை-83 வந்தவாசி கோட்டைப்போர்1760-கருத்துப்பகிர்... தமுஎகச/வந்தவாசி திண்ணை-83 வந்தவாசி கோட்டைப்போர்1760-கருத்து ஆசியன் அகாதெமி மருத்துவப் பயிற்சிப் பள்ளி வந்தவாசியில் தமுஎகச வின் திண்ணை 83 நிகழ்வு 30.11.2010 செவ்வாய் காலை நடைபெற்றது.இரா.சிவகுமார் தலைமைதாங்கினார்.வந்தவாசிப்போர் குறித்து வழக்கறிஞர் எல்.குமார்,அ.ஜ.இஷாக்,ஆரிசன்,பூங்குயில்சிவகுமார்,எம்.கோவிந்தராஜன் அகியோர் பேசினர். வழக்கறிஞர் எல்.குமார் பேசியதிலிருந்து... நம் வாழ்க்கையிலிருந்து வரலாற்றைப் பிரிக்க முடியாது.இதற்கு நாம் முன்னோர்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதும்,தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது,நாடுகள்,புராணங்கள்,இலக்கியங்கள் யாவும் போர் குறித்து அதிகம் பேசுகிறது.பகவத்கீதையின் குருசேத்திரப்போரும் ,அசோக மன்னனின் கலிங்கத்துப்போரும் மனிதகுலத்துக்கும்,தனிமனிதனுக்கும் பாதை வகுத்துத்தந்தது எனலாம்.நாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்கான மையப் புள்ளியாக வந்தவாசிப்போரைக் கருதலாம்.வாழ்க்கை வரலாறாக இருக்க வேண்டும்.ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் 1760ஜனவரி22ல் நடந்த வந்தவாசி சண்டையில் இங்கிலாந்துப் படை வெற்றி பெற லாலி,புஸ்ஸிஆகிய பிரஞ்சுப் படை தோற்கிறது.இந்த தோல்விக்கான காரணத்தால் லாலிக்கு பிரஞ்சு நாட்டில் தூக்கு தண்டணை விதிக்கப்படுகிறது என்பதே வந்தவாசிப் போராகும். நன்றி நாவலாசிரியர் கா.பரிதா கூறினார். |
Wednesday, December 1, 2010
திண்ணை-83 வந்தவாசி கோட்டைப்போர்1760-கருத்துப்பகிர்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment