பிரித்துப்பார்..
என்று-
கோஷம் போட்டோம்
பிரித்தார்கள்!
உடைக்காதே என்று
உரக்கக் கத்தினோம்
உடைத்தார்கள்!
மக்களுக்கு ..
வெளிச்ச வாழ்வைக்
கொடு என்று
கோரிக்கை வைத்தோம்!
இருட்டை-
இனாமாகத் தந்தார்கள்!
நிலவை..
சூரியனை..
உடைத்து
வெளிச்சத்தைப்..
பங்கிட்டுத் தரவும்-
வியாக்கியானம் செய்தார்கள்!
விரும்பிய மட்டும்
கிடைக்காமலே
விலகியிருக்கிறது
(எ)இப்பவும் தான்
மின்சாரம்!
Monday, October 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment