Popular Posts

Thursday, October 21, 2010

சும்மா பாடுங்க..

உன் கண்கள் காந்தத் தொழிற்சாலை
கனவுகள் வெல்லும் சிறைச்சாலை
என் கண்கள் உனக்கும் பூமாலை
நனவுகள் மலர்ந்திடும் வான்சோலை!

உன் வரவில் இருட்டும் பதுங்கிவிடும்
கண்ணொளி யும் வழியைக் காட்டிவிடும்
கார்முகிலை மினனல் வெட்டிவிடும்
மழை பூமியை வறட்சியும் வாட்டிவிடும்!

பிறந்த மேனியில் உதடுகள் கிள்ளும்
புவியீர்ப்பு விசையில் மனிதம் துள்ளும்
உறைந்துபோக நினைவலை சொல்லும்
என்னை உந்தன் உயிரும் மெல்லும்!

காமன் கையில் கரும்பு வில்லும்
கண்ணயர்ந்து காதல் சொல்லும்
மாமன் எந்தன் மனதில் துள்ளும்
மலர்க்கணையும் உன்னை வெல்லும்!

சுற்றம் சூழ்ந்து திசைவழி காட்ட
சூடிக்கொள்ள பூமணம் வீசும்
குற்றம் புரிய கன்னம் ஏங்க
கூரீட்டியாய் கண்கள் மாறும்!

வியர்வை நீரும் உப்பாய்க் கரையும்
விரும்பிய வரையும் கடலும் சுரக்கும்
கனவுத்தேரும் ஊர்வலம் போகும்
மனது முழுக்க அன்பில் தோயும்!

வேதம் நான்கும் விலாசம் கேட்கும்
வேள்விகள் தொடர வானும் கரையும்
மதங்கள் யாவும் மாசாய்ப் போகும்
கேள்வியின் பதிலும் தூசாய் மாறும்!

No comments:

Post a Comment